கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு என உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சுவாமி தரிசனத்திற்கு முன்னர் தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும். கோயில் வெளியில் இருந்து சுவாமியை வணங்கக் கூடாது. வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும். கோயிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது.