சித்திரை திருவிழாவின் "பொன்னூஞ்சல் வைபவம்" கோலாகலம்

73பார்த்தது
சித்திரை திருவிழாவின் "பொன்னூஞ்சல் வைபவம்" கோலாகலம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று ஆலயத்தில், "பொன்னூஞ்சல் வைபவம்" வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஞ்சராகத்தில் வாசிக்கப்பட்ட நாதஸ்வர இசையில் நடைபெற்ற பொன்னூஞ்சல் வைபவத்தை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி