சீனாவில் பெய்து வரும் கனமழை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் குவாங்டாங் நகரில் இம்மாதம் 20ம் தேதி நள்ளிரவில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கனமழை மற்றும் பலத்த வெள்ளம் காரணமாக ஒரு பாலம் இடிந்து சில நொடிகளில் ஆற்றில் விழுந்தது. நல்லவேளையாக அப்போது அந்த பாலத்தில் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்த CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.