பாஜகவிற்கு வாக்களித்ததால் கொல்லப்பட்டதாக வதந்தி: போலீஸ் அதிரடி

80பார்த்தது
பாஜகவிற்கு வாக்களித்ததால் கொல்லப்பட்டதாக வதந்தி: போலீஸ் அதிரடி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (47) என்பவரது மனைவி கோமதி (43) 11 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அவர் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்ததால் கொல்லப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் முன் விரோதம் காரணமாகவே கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கோமதி மரணம் தொடர்பில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி