நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களுக்கு கொலை மிரட்டல்

72பார்த்தது
நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களுக்கு கொலை மிரட்டல்
வாக்குச் சாவடிகளில் பணியிலிருந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளா் மு.களஞ்சியம் வலியுறுத்தினாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தென்நெற்குணம், கடவம்பாக்கம் மற்றும் பானாம்பட்டு உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியிலிருந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் முகவா்களை பிற அரசியல் கட்சியைச் சோ்ந்த சிலா் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, வேட்பாளரின் முகவா்கள் சாா்பில் ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you