மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர் (வீடியோ)

27536பார்த்தது
உ.பி. மாநிலம் பரேலியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி இசாத்நகரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் திருமணத்திற்கு முந்தைய நாள் பார்ட்டி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் சர்தக் அகர்வால் கலந்து கொண்டார். மேலும் தொழிலதிபர் சஞ்சீவ் அரோரா மற்றும் அவரது மகன் ரித்திவ் அரோரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ரித்திவ் அரோராவுக்கும் சர்தக் அகர்வாலுக்கும் ஏற்பட்ட தகராறின்போது அங்கு வந்த சஞ்சீவ் அரோரா, திடீரென சர்கத் அகர்வாலை தாக்க ஆரம்பித்தார். பின்னர் அவரை தள்ளிக்கொண்டு சென்று மொட்டை மாடியின் மேலிருந்து தள்ளிவிட்டுள்ளார். சர்கத் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.