முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கவுள்ளது.