விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆதி கிருஷ்ணன் என்பவர் நண்பர்களுடன் தனது வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு ஊரான நத்தத்தில் இருக்கும் குளத்தில் கரைக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கலாம் என நினைத்து உள்ளே இறங்கிய சிறுவன் ஆழமான பகுதியில் காலை வைத்ததால் நீரில் மூழ்கினார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.