விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

74பார்த்தது
விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றுகொண்டிருந்த யுகே611 விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இன்று (மே 31) ஸ்ரீநகர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ஏடிசி) அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் விமானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு கிடைக்காததால், அது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி