ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் - டெல்லி போலீஸ் தகவல்

79பார்த்தது
ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் - டெல்லி போலீஸ் தகவல்
டெல்லியில் இன்று காலை பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக பள்ளிகளில் இருந்த குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஐபி முகவரி மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி