ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இரவு 8.15 மணியளவில் காரா மதனா கிராமத்தில் விவசாயிகள் சிலர் பயிர் எச்சங்களை எரித்து கொண்டிருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து மாநில காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.