மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா, 126 பெரிய மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஹசன் மாவட்டம் நந்தகொண்டனஹள்ளி கிராமத்தில் அனுமதியின்றி அரசு நிலத்தில் பெரிய மரங்களை வெட்டி கடத்தியதாக விக்ரம் சிம்ஹா மீது வனத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்தார்.