IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ

61பார்த்தது
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ
2024 ஐபிஎல் தொடர் முதல், பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் வரை கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்கும் இந்த விதி பொருந்தும். அந்த 2 மணி நேரம் கூடுதல் கால அவகாசத்திலும் போட்டியை முடிக்க முடியவில்லை என்றால், ரிசர்வ் நாளான மறுநாள் போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு பிளே ஆப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாள் என 2 நாட்களிலும் மழையால் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி