தென்காசி மாவட்டம் பாறையடி தெருவை சேர்ந்த ஜமால் மைதீன் என்பவர், அப்பகுதியில் உள்ள சில இளைஞர்களை கண்டித்ததாகக் கூறப்படுகின்றது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், உருட்டு கட்டையால் மைதீனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது,
இதனால் தென்காசி போலீசார் முகமது உசேன், முகமது இஸ்மாயில், இம்ரான் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.