மே மாததத்துக்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும், "துவரம் பருப்பு, பாமாயில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் போன்ற அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே பருப்பு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது" என விளக்கமளித்துள்ளனர்.