மகளை காப்பாற்ற முயன்ற தந்தை மரணம் (வீடியோ)

63பார்த்தது
தண்ணீரில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் குமார் (47) என்பவர் திங்கள்கிழமை கோவிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பும் வழியில் குடும்பத்துடன் எல்என்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அங்கு செல்ஃபி எடுக்கும் போது மகள் சைனித்யா தண்ணீரில் தவறி விழுந்தார். தந்தை விஜய் குமாரும், மகன் விக்ராந்தும் சைனித்யாவை காப்பாற்ற முயன்றபோது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்து தாய் அலறி துடித்ததால் அங்கிருந்த மீனவர் சங்கர் இரு குழந்தைகளையும் காப்பாற்றினார்.

நீரின் ஆழத்தில் மூழ்கிய விஜய் குமாரை காப்பாற்ற முடியவில்லை. கண்முன்னே தந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.