மசாஜ் சென்டரில் விபச்சாரம்: 3 பெண்கள் மீட்பு

75பார்த்தது
திருச்சி நகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் பாலக்கரை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மேலப்புதூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கும் மஜாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் செல்வம் உள்ளிட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது 2 செல்போன்கள், ரூ.5,000 பணம் மற்றும் பணம் செலுத்தக்கூடிய ஸ்வைப் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி