புதிய கட்சி தொடங்கும் பிரஷாந்த் கிஷோர்.!

69பார்த்தது
புதிய கட்சி தொடங்கும் பிரஷாந்த் கிஷோர்.!
பீகார் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் ஆலோசகரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியு, பாஜக போன்ற 3 கட்சிகளாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மக்கள் துன்பத்தில் உள்ளார்கள். எனவே வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, ஜான் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய இருக்கிறேன்” என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி