ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்) திட்டத்தை மத்திய அரசு 2014ல் அறிமுகப்படுத்தியது. ஜன்தன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையில் ரூ.2 லட்சம் இலவச விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டின் கீழ் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்களின் திடீர் மரணம் ஏற்பட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ரொக்கத்தை பெறுவார்கள். இந்த நன்மைகளைப் பெற ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம். கூடுதல் விவரங்களுக்கு பின் வரும் இணையதள முகவரியை பார்க்கவும்... https://pmjdy.gov.in/