"வாழை"‌ கண்ணீரில் கருக்கொண்ட காவியம் - திருமாவளவன்

85பார்த்தது
"வாழை"‌ கண்ணீரில் கருக்கொண்ட காவியம் - திருமாவளவன்
"வாழை" திரைப்படம் குறித்து திருமாவளவன் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம். உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல. வாழ்க்கையே பெருஞ்சுமை. புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்
மாரியின் வேர்களில் மார்க்சியம். போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும்‌ புரட்சிகரப் படைப்பு! இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும் ஒரு சமூகத்தின் உயிர்வலி என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி