வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

79பார்த்தது
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்
சென்னை ஆதம்பாக்கம் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (44) என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் 35 வயது பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீ்ட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சங்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் சங்கரை கைது செய்த போலீசார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி