வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது

65பார்த்தது
வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது
சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது. ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. முழு விவரங்களை dlochennai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி