மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணி இன்று தொடங்கியது. சென்னையில் திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி தனது வாக்கை தபால் வாக்கு அடிப்படையில் செலுத்தினார், அவரிடம் தேர்தல் அதிகாரிகள் வாக்கை சேகரித்தனர். முந்தைய 2006 - 2011 திமுக ஆட்சியில் ஆற்காடு வீராசாமி மின்சார துறை அமைச்சராக பணியாற்றினார்.