பெரம்பலூர்: லாரியில் மோதிய கல்லூரி பேருந்து - மாணவிகள் படுகாயம்

5566பார்த்தது
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் உட்பட நான்கு மாணவிகள் படுகாயம், போலீசார் விசாரணை.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் தனியார் (ஸ்ரீ ராமகிருஸ்ணா) பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு கல்லூரி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து, மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடி நோக்கி சென்ற கல்லூரி பேருந்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே, சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரிமீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுநர் வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த சோலைராஜ - 35 காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன், பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் 4 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயம் ஏற்பட்டு, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி