நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது
திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில்
திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்ய
வந்தனர். அப்போது இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் நாங்கள்தான் முதலில் வந்தோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி: பாலிமர் நியூஸ்