மதுரையை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் சிறுமியை அவரது பெரியப்பா, பெரியம்மா வளர்த்து வந்தனர். இந்நிலையில் சிறுமியை அவரது
பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். சிறுமி குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக பெரியம்மாவும் சேர்ந்து நாடகமாடியுள்ளார். பின்னர் சிறுமியின் பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவந்ததை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.