போதைக்கு அடிமையான குழந்தைகள் ஆரம்ப நிலையில் குற்ற உணர்ச்சி காரணமாக பெற்றோரின் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள். அது போன்ற குழந்தைகளை அருகில் அமர வைத்து நேரடியாக பேசுங்கள். நீங்கள் மனம் விட்டு பேசும்பொழுது இதை ஒரு வாய்ப்பாக கருதி மனதில் உள்ளது எல்லாம் குழந்தைகள் கொட்டி தீர்த்து விடுவார்கள். போதைப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், உங்களின் அன்பான அணுகுமுறை அவர்களுக்கு உதவலாம்.