ஆந்திர எம்பி மகள் ஜாமீனில் விடுவிப்பு!

64பார்த்தது
ஆந்திர எம்பி மகள் ஜாமீனில் விடுவிப்பு!
சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய ஆந்திர எம்பியின் மகள் பீடா மாதுரி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பீடா மாதுரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணைக்கு பின் பீடா மாதுரி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி