கடலூரில் பிறந்தது அவமானம் - தங்கர் பச்சான் பேச்சு

55பார்த்தது
கடலூரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க பாமக சார்பில் போட்டியிட்ட தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர் உங்களுக்கெல்லாம் எதுக்கு வாக்கு? எதுக்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக இருக்கிறது. இனியாவது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் படிப்பு ஆகியவற்றையெல்லாம் யோசித்து அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பேசி விட்டு சென்றார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சைக் கேட்க கூட்டமே கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.