மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 65 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்பதால் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.