முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்

51பார்த்தது
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
திருவோணம் வட்டத்தை புதிதாக உருவாக்கிய முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் திருவோணத்தை ஒட்டியுள்ள 4 குறுவட்டங்கள், 45 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் 43 ஆண்டுகள் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். இந்த கனிவான நடவடிக்கைக்காக தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையிலும், அப்பகுதி மக்களின் சார்பிலும் முதலமைச்சருக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி