மக்களவைத் தேர்தலில் 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3.32 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயுத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறதுமக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.