அம்பானி வீட்டு கல்யாணம்.. அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

585பார்த்தது
அம்பானி வீட்டு கல்யாணம்.. அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது
ஆனந்த் அம்பானியின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்த 2 பேரிடம் திருமணத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் இல்லை. இதனால், அத்துமீறி நுழைய முயன்றதற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (26), தொழிலதிபர் லுக்மேன் முகமது ஷபி ஷேக் (28) என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி