விமானத்தை தாமதமாக இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஜிதேந்தர் குமார் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கு ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டார். ஆனால், விமானம் தாமதமானதால் சுவிட்சர்லாந்து செல்லும் விமானம் தாமதமானது. அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் 8 மாதங்களுக்குப் பிறகு, ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு வெளியானது.