அதிமுக நிர்வாகி படுகொலை விவகாரம் - 5 தனிப்படைகள் அமைப்பு

79பார்த்தது
அதிமுக நிர்வாகி படுகொலை விவகாரம் - 5 தனிப்படைகள் அமைப்பு
சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம் நேற்று (ஜுலை 3) இரவு கொலை செய்யப்பட்ட நிலையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை வழங்கிய நிலையில், உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாதகாப்பட்டிைய அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது 2 டூவீலர்களில் சிலர் கும்பலாக எதிரில் வந்து வழிமறித்து அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தொடர்புடைய செய்தி