பழனியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போது அவரது காரை வழிமறித்த அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். சமோகவலைத்தளத்தில் தவறான தகவல் பரப்புவதாக தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.