நடிகை பவித்ரா கவுடாவுக்கு உடல்நல பாதிப்பு

82பார்த்தது
நடிகை பவித்ரா கவுடாவுக்கு உடல்நல பாதிப்பு
கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை நகர போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து மருத்துவர்களை அழைத்தனர். அங்கிருந்து மல்லத்தஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவர் குணமடைந்த பின் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் நடிகரும், பவித்ரா கவுடாவின் காதலனுமான தர்ஷனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி