பள்ளிக்கூடத்திற்கு அரிவாளுடன் வந்த மாணவனால் பரபரப்பு

74பார்த்தது
பள்ளிக்கூடத்திற்கு அரிவாளுடன் வந்த மாணவனால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் தாழையூத்து அரசு உதவி பெறும் பள்ளியில் அரிவாளுடன் இன்று (செப்.11) மாணவர் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் சோதனை செய்த போது பையில் அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரித்ததில் சக மாணவனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், அரிவாளை எடுத்து வந்ததாக தெரியவந்தது. விசாரணைக்குப் பின், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி