பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

14968பார்த்தது
பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவியும், அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(ஜூன் 29) மாணவி காணாமல் போயுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல இடங்களில் தேடி மாணவியை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் மாயமான மாணவி பள்ளி காதலனுடன் சீருடையில் தாலி கட்டிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன், அதற்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி