"1980-களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது"

82பார்த்தது
"1980-களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது"
1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் தற்போதுதான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஆனால், 1980-களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி