ஜூன் 4ந்தேதி அன்று மீண்டும் மோடிஜி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 3 வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள தருணத்தில், பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மோடி ஜி அவர்களின் வருகை தமிழக மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர் கொண்டுள்ள அளப்பரிய பாசத்தை காட்டுகிறது என்பதை நாம் உணரலாம் என உணர்ச்சி ததும்ப பதிவிட்டுள்ளார்.