இந்தோனேஷியாவில் பெண் என நினைத்து ஆண்-ஐ திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏகே என்ற நபர் சமூக வலைதளத்தில் சந்தித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான 12 நாட்களுக்கு பிறகு தனது மனைவி ஆண் என தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். ஃபேக் ஐடி மூலம் ஏகே-விடம் பேசிவந்த அந்த ஆண் புர்கா அணிந்தும், பெண் குரலில் பேசியும் அவரை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின் மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்ட போது சொத்திற்காக ஏகே-வை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.