இயக்குனர் சங்கர் தனது அடுத்த படம் குறித்து பேசுகையில், “எனக்கு நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. தற்போது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன. ஒன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படம். மற்றொன்று, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம். மற்றொன்று 2012 திரைப்பட பாணியில் ஒரு சை ஃபை திரைப்படம். இது தான் என்னுடைய பிளான். இந்த மூன்று வகையான திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட் கொண்டது. அனைத்து கதைகளும் மிகப்பெரிய பட்ஜெட்டையும், நிறைய விஎஃப்எக்ஸ் காட்சிகளை கேட்கிறது. இந்த படங்களில் எல்லாம் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.