வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி

76பார்த்தது
வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் கார்த்திக் என்ற கூலி தொழிலாளியின் மகன் துரைராஜ் காலாண்டு விடுமுறையின் இறுதி நாள் என்பதால் நேற்று (அக் 06) வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் கால் இடறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி