நொடிப்பொழுதில் சரிந்த 5 மாடி கட்டிடம்!

556பார்த்தது
ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் உள்ள மராவாக் கிராமத்தில், அரசு கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்தது ராஜ்குமார் என்பவரின் 5 அடுக்கு மாடி கட்டிடம். நேற்று மதியம் எதிர்பாராத விதமாக நொடிப் பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. கட்டிடத்தில் உள்ள விரிசலை முன்கூட்டியே கண்டுபிடித்ததால் குடியிருப்பு வாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. அந்த வீட்டின் மேல் பகுதியில் அகழ்வு பணிகள் நடந்து கொண்டிருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி