கள்ளுக்கு தமிழக அரசு தடையை விலக்க வேண்டும் - நல்லசாமி

73269பார்த்தது
கள்ளுக்கு தமிழக அரசு தடையை விலக்கி உணவு பொருளாக அறிவித்திட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் நல்லசாமி வலியுறுத்தியுள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜனவரி 21ஆம் தேதி விழுப்புரம் மேல்மலையனூரில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்திற்கு உட்பட்டது அரசியலமைப்பு சட்டமா? என்ற கேள்விக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும். கள்ளுக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்கடிக்கப்படுவார்கள்' என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி