மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் வகையில், வரும் 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர்
கமல்ஹாசன் தலைமையில் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் செயல்பாடுகள், தேர்தல் ஆயத்த பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே
திமுக,
காங்கிரஸ் கட்சிகளுடன்
கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வரும் சூழலில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின்
இந்தியா கூட்டணியில் மநீம இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை
கமல்ஹாசன் போட்டியிட்டால் கோவை தொகுதியில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.