ஊரைச் சுற்றி உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் 15 வயது சிறுவன் தனது பாட்டியையே கொடூரக் கொலை செய்துள்ளான். சந்தேகம் வராமல் நண்பர் உதவியுடன் பாட்டியை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்துள்ளது. ஜிடிபி என்கிளேவில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.