தனுஷ்கோடி, அரிச்சல்முனை செல்லும் பிரதமர் மோடி

2278பார்த்தது
தனுஷ்கோடி, அரிச்சல்முனை செல்லும் பிரதமர் மோடி
ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை 8.55 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணியளவில் அரிச்சல்முனை கடலில் புனித நீராடுகிறார். அதனை தொடர்ந்து கடல் மணலில் சிவலிங்கம் உருவாக்கி சிறப்பு பூஜை மற்றும் சங்கல்பம் செய்து வழிபாடு மேற்கொள்வார். காலை 10.25 மணிக்கு தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், அங்கு காலை 11 மணி வரை சாமி தரிசனம் செய்யவுள்ளார். நேற்றைய தினம் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்களில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி