15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

78பார்த்தது
15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள 15 வயது சிறுமி, தனது நண்பர்களுடன் அடிக்கடி அண்ணாநகரில் உள்ள கஃபேவுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே கஃபேவிற்கு வரும் பிரதிக்ஷா என்ற பெண் தான் சினிமா காஸ்டியூம் டிசைனர் எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் எனக்கூறி சிறுமியை தனது வீட்டிற்கு பிரதிக்ஷா அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு இனிப்பில் மயக்கமருந்து கலந்துகொடுத்து தனது காதலன் சோமேஷ், அவருடைய நண்பர் வில்லியம்ஸ் ஆகியோரை விட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரதிக்ஷா, சோமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி